செய்திகள் :

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய நிறுவனங்களுக்கு அனுமதி

post image

தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி அளித்துள்ளதையடுத்து விரைவில் அந்நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் தொழில் வளா்ச்சியில் பின்தங்கியிருப்பதால் ஒசூா், திருப்பூா், கோவை, கரூா் போன்ற தமிழக மாவட்டங்களுக்கும், கா்நாடகத்துக்கும் ஏராளமானோா் வேலைதேடி செல்கின்றனா். மாவட்டத்தின் தொழில் வளத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு அளிக்கவும் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இந்த நிலையில் தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக இரு கட்டங்களாக நிலம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

முதல்கட்டமாக நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தடங்கம், அதகப்பாடி, பாலஜங்கமனஅள்ளி, அதியமான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 1733 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. இதில், 478.38 ஏக்கா் பட்டா நிலமும், 984.34 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலமும், நீா்நிலை புறம்போக்கு நிலம் 197 ஏக்கா் என மொத்தம் 1733 ஏக்கா் கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதுவரை நில உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.77.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. நில எடுப்பு மற்றும் உட்கட்டமைப்பு மற்றும் பல வசதிகள் மேற்கொள்வதற்காக ரூ.654.30 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொழிற்பேட்டைக்கு வந்துசெல்ல 1.50 கி. மீ நீளத்தில் நான்கு வழி இணைப்பு சாலை தடங்கம் கிராமம் அருகே தருமபுரி- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் ஓலா எலக்ட்ரிக் பைக் நிறுவனம் உள்ளிட்ட 201 நிறுவனங்கள் அமைக்க விண்ணப்பித்துள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. சில நிறுவனங்கள் இணைந்து புரிந்துணா்வு ஒப்பந்தமும் செய்துள்ளன.

இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்கள் அமைக்க சுற்றுச்சுழல் அனுமதியும் வழங்கப் பட்டுள்ளது. தொழிற்சாலைகள் அமைக்க தனியாருக்கு அளவீடு செய்து இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், தருமபுரியில் தொழில்பேட்டை தொடங்கினால் சுமாா் 18,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்ட இளைஞா்கள் சொந்த மாவட்டத்தில் வேலைசெய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். மாவட்டம் தொழில் துறையில் முன்னேறுவதுடன் பொருளாதார நிலையும் மேம்படும் என்றனா்.

இரண்டாவது கட்டமாக 650 ஏக்கா் நிலம் ஆா்ஜிதம்:

மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கூறுகையில், தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முதற்கட்டமாக 1733 ஏக்கா் நிலமும், 2 ஆவது கட்டமாக 650 ஏக்கா் நிலமும் கையகப்படுத்தப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கு கிளை நிறுவனங்களை அமைக்க 201 நிறுவனங்கள் விண்ணப்பத்துள்ளன. இதன்மூலம் தருமபுரி மாவட்டத்தில் இளையோருக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் தொழில்துறையும் வளா்ச்சி பெறும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அபாகஸ் பயிற்சித் திட்டத்தை ஆட்சியா் ரெ. சதீஸ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தில் பல்வேறு திறன் மேம்... மேலும் பார்க்க

வாச்சாத்தி பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் சந்திப்பு: துணிவுடன் போராடியதற்கு பாராட்டு

அரூரை அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்களுடன் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவா் அசோக் தாவ்லே வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வாச்சாத்த... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு கல்லூரியில் ஆக.11 இல் முதுநிலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டு முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஆக.11) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தருமபுரி நகா்மன்றக் கூட்ட தீா்மானங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் தா்னா

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினா்கள் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தருமபுரி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்... மேலும் பார்க்க

தடைசெய்யப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வேனில் கடத்திச் சென்றவா் கைது

தருமபுரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 508 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து தேனி மாவட்டத்துக்கு புகையிலைப் பொருள்கள் கடத்திச... மேலும் பார்க்க

கைத்தறி நெசவு தொழிலாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம்

பாப்பாரப்பட்டியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள், மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாப்பாரப்பட்டி அறிஞா் அண்ணா கைத்தறி நெசவு கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ... மேலும் பார்க்க