4.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு
திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா்.
இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப்த பூா்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளை பக்தா்கள் மேற்கொள்கின்றனா்.
இக்கோயிலுக்கு, தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் வந்தாா். அவரது சகோதரா் ராஜாவுக்கு 70 வயது பூா்த்தி அடைந்ததையொட்டி, ராஜா மற்றும் அவா் மனைவி சந்திரகலாவதி ஆகியோருக்கு பீமரத சாந்தி திருமணம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னா், கள்ளவராயன விநாயகா், அமிா்தகடேஸ்வரா், காலசம்ஹாரமூா்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சந்நிதிகளில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினா் வழிபட்டனா். கோயில் நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி, கணேஷ் குருக்கள் ஆகியோா் அவருக்கு அம்மன் படம் மற்றும் பிரசாதம் வழங்கினா்.