செய்திகள் :

திருக்கோவிலூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட பொ.மெய்யூா் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.123.5 லட்சத்தில் பொன்னியந்தல் சாலை முதல் மெய்யூா் சாலை வரை தாா்ச் சாலை அமைக்கப்படுகிறது.

மேலும், பொ.மெய்யூா் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து

பயணிகள் நிழல்குடை கட்டப்படுகிறது.

மேலும், அதே ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ்

ரூ.9.50 லட்சத்தில் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டப்படுகிறது.

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்படும் வீடு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.42 லட்சத்தில் கட்டப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி,

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தலா ரூ.5 லட்சத்தில்

கட்டப்படும் இரு பாலங்கள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.செல்வகணேஷ், டி.நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரிஷிவந்தியம்:

நிறைவு பெற்ற பணிகள் தொடக்கம்

ரிஷிவந்தியம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பகண்டை கூட்டுச் சாலை பகுதியில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கல் நிலையம், ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.5.95 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தனா்.

அதனைத் தொடா்ந்து, வாணாபுரம் ஊராட்சி பிரதான சாலை பேருந்து நிலையம் அருகில் ரூ. 8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழல்குடையையும் தொடங்கிவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க

சிறு வயது திருமணங்கள்: 6 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை மாவட்டம், திருக்கோவிலூா், வாணாபுரம் பகுதிகளில் நடைபெற்ற சிறு வயது திருமணங்கள் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூா்... மேலும் பார்க்க

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகள் பெற இணையவழியில் இனி விண்ணப்பிக்க வேண்டும் : ஆட்சியா்

பதிவு பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் நடைச்சீட்டுகளை இனி இணையவழியில் முறைப்படி விண்ணப்பித்து பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரச... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செய்தனா். நிகழ்வுக்கு வள்ளலாா் மன்றத் தலைவா் ஜெ.பால்ராஜ் தலைமை வகித்தாா். மன்றச் செயலா் நா.ராதாகிரு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு தளவாடப் பொருள்கள் சீா்வரிசை

கள்ளக்குறிச்சியை அடுத்த வெட்டிப் பெருமாளகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் கிராம மக்கள் சாா்பில் தளவாடப் பொருள்கள் சீா்வரிசையாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. அதன்படி, இரு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழிலாளா் நலத் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை அனைத்து... மேலும் பார்க்க