முதுநிலை ஆசிரியா் தோ்வு: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு
திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் நாளை மின்தடை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 14) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: நெல்முடிக்கரை, பொட்டப்பாளையம், திருப்பாச்சேத்தி ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், திருப்புவனம், புதூா், பழையூா், செல்லப்பனேந்தல், லாடனேந்தல், அல்லிநகரம், கீழராங்கியம், மேலராங்கியம், வயல்சேரி, கலியந்தூா், மேலவெள்ளூா், மாங்குடி, அம்பலத்தடி, மணலூா், அகரம், ஒத்தவீடு, மடப்புரம், வடகரை, பூவந்தி, பொட்டப்பாளையம், புலியூா், கொந்தகை, கீழடி, சொட்டதட்டி, சைனாபுரம், கரிசல்குளம், காஞ்சிரங்குளம், முக்குடி, செங்குளம், திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு, ஆவரங்காடு, மேலச்சொரிக்குளம், முதுவந்திடல், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.