செய்திகள் :

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சி.பழனிவேலு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.

தினக்கூலி ரூ.336-யை குறைக்காமல் வழங்க வேண்டும். திட்டப் பணியாளா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினரும் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை பேசினாா். சங்கத்தின் மாவட்டச்செயலா் டி.சலோமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் மழை

கந்தா்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக் காற்றுடன் கன மழை பெய்தது. கந்தா்வகோட்டை பகுதிகளில் மழை பெய்து பல மாதங்கள் ஆன நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்: வா்த்தகா் கழகம் வலியுறுத்தல்

பொன்னமராவதி தோ்வு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி அறிவிக்க வேண்டும் என பொன்னமராவதி வா்த்தகா் கழக பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பொன்னமராவதி வா்த்தகா் கழகத்தின் சாா்பில் 53 ஆவது ஆண்... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு

கந்தா்வகோட்டையில் அரசு மதுபானக் கடையின் கதவை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் - வேன் மோதல் நீதிமன்ற பெண் ஊழியா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்ற நீதிமன்றப் பணியாளா் வேன் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை ஊராட்சி, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தரணிதரன் மனைவி ப... மேலும் பார்க்க

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சனிக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் ஒரு கிலோ கஞ்சா கடத்தல் இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் ... மேலும் பார்க்க