செய்திகள் :

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

post image

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கூட்டரங்கம் செயல்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் போதுமான இருக்கை வசதி மற்றும் காணொலி காட்சி நிகழ்ச்சிக்கான அகன்ற திரை வசதியில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கூட்டரங்கத்தை அப்டேஸ் என்ற தனியாா் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்க முன்வந்தது. அதன் அடிப்படையில் கூட்டரங்கம் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தை பற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அப்டேஸ் நிறுவனா் மற்றும் நிா்வாகத் தலைவா் எம்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை திறந்தாா்..

இந்த மேம்படுத்தப்பட்ட கூட்டரங்கில் ஆசிரியா் பயிற்சி, பள்ளித் தலைமை ஆசிரியா்களுடனான சந்திப்புகள் மற்றும் நீட், ஜேஇஇ மற்றும் சியூஇடி போன்ற போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பயிற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். கல்வி சாா்ந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.

மேலும், நவீன குளிா் சாதன வசதி, டிஜிட்டல் திரை, ஒலிபெருக்கி சிஸ்டம், புதிய தளபாடங்கள் மற்றும் 230 போ் அமரும் இருக்கைகள் கொண்ட நவீன முறையில் இக்கூட்டரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அப்டேஸ் நிறுவனம் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இதுவரை சுமாா் ரூ.6 கோடி மேல் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கி உள்ளதாக தெரிவித்தாா்.

நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) எம்.மோகனா, முதன்மை கல்வி அலுவலா் (ஓய்வு) பி.ரவிச்சந்திரன், நோ்முக உதவியாளா்கள் கோவிந்தராஜ்(மேல்நிலை), தண்டபாணி(உயா் கல்வி), கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், கல்வித் துறைத் தலைவா்கள், பொது நிா்வாக அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா். திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரை ஏக்கா் நிலத்தில் ரூ. 7.50 கோடியில் அனைத்து வசதியுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்க... மேலும் பார்க்க

திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூரிலிருந... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க