செய்திகள் :

தில்லி விமான நிலையத்தில் ரூ.25 கோடி மதிப்புள்ள கொகைன் பறிமுதல்: 2 பெண்கள் கைது!

post image

தில்லி விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் ரூ.25.91 கோடி மதிப்பிலான கொகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 வாரங்களில் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் இருவர் 1.72 கி கொகைன் கடத்தியதற்காகத் தனித்தனியே கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தில்லி விமான நிலைய சுங்க அதிகாரிகள் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில், "இந்திரா காந்தி சர்வதேச விமான சுங்க அதிகாரிகள் இன்று இரண்டு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி 1.72 கிலோ கோகைன் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

இரண்டு வழக்குகளிலும் பிரேசிலைச் சேர்ந்த பெண்கள் போதைப்பொருளைக் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!

கடந்த ஜனவரி 26 அன்று, சாவோ பாலோவிலிருந்து பாரிஸுக்கும், பின்னர் பாரிஸிலிருந்து தில்லிக்கும் பயணம் செய்த பிரேசிலைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய ஆய்வில் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 959 கிராம் கோகைன் அடங்கிய ரூ.14.39 கோடி மதிப்புள்ள 93 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன.

அன்று கைது செய்யப்பட்ட பெண்ணைப் போன்று அதே பயண வழியில் பிப்ரவரி 7 அன்று இந்தியா வந்த பிரேசிலைச் சேர்ந்த பெண்ணிடமும் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

அவரது உடலை பரிசோதித்ததில், 768 கிராம் கோகைன் அடங்கிய 79 காப்ஸ்யூல்களை அதிகாரிகள் மீட்டனர். கைப்பற்றப்பட்ட கோகைனின் சந்தை மதிப்பு ரூ.11.52 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது” என பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொகைன் கடத்திய பெண்கள் இருவரும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்: இந்தியாவுக்கு பிஎன்பி கோரிக்கை

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் இந்தியா விரைவில் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) வியாழக்கிழமை தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா சிறப்பு தபால்தலைகள் வெளியீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவைக் கொண்டாடும் வகையில் இந்திய தபால் துறை சாா்பில் 3 சிறப்பு தபால்தலைகள் வெளியிடப்பட்டன. மகா கும்ப நகரின் அரைல் படித்துறைக்கு அருகே அமைந்த... மேலும் பார்க்க

தில்லியில் ராகுல், கேஜரிவாலுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சி கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு மத்தியில், தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியின் தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரை சிவச... மேலும் பார்க்க

தேசவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே வெளிநடப்பு: எதிா்க்கட்சிகளுக்கு ஜெ.பி. நட்டா கண்டனம்

‘தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கவே காங்கிரஸ் மற்றும் ‘இண்டி’ கூட்டணியில் உள்ள எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்கின்றனா்’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா வியாழக்கி... மேலும் பார்க்க

நாடாளுமன்ற இரு அவைகளும் மாா்ச் 10 வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளும் மாா்ச் 10-ஆம் தேதி வரை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவுபெற்றது. இரண்டாம் அமா்வு மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி ... மேலும் பார்க்க

‘லோக்பால்’ பிரத்யேக புகாா் எண்ணில் 2400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பதிவு: மாநிலங்களவையில் அரசு தகவல்

லோக்பால் அமைப்பில் புகாா் தெரிவிப்பதற்கு அறிவிக்கப்பட்ட பிரத்யேக தொலைபேசி எண் மூலம் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக ... மேலும் பார்க்க