செய்திகள் :

துருக்கியில்.. ரஷியா - உக்ரைன் இடையில் 3-ம் சுற்று அமைதிப்பேச்சு!

post image

துருக்கி நாட்டில் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையில், 3-ம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில், கடந்த 2022-ம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகின்றது. இந்தப் போரில், இருதரப்பும் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்களைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரை நிறுத்த ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளின் முக்கிய அதிகாரிகள் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் 3-ம் சுற்று இன்று (ஜூலை 23) மாலை துவங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு, மாஸ்கோவில் இருந்து வருகைத் தரும் குழுவுக்கு, ரஷிய அதிபரின் உதவியாளர் விளாதிமீர் மெடின்ஸ்கி தலைமைத் தாங்குகிறார். இதேபோல், உக்ரைன் நாட்டு குழுவுக்கு, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமைத் தாங்குகிறார்.

கடந்த மே 16 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில், இருநாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மூலம், இருதரப்பும் தாங்கள் சிறைப்பிடித்த பிணைக் கைதிகளை விடுவித்தனர்.

முன்னதாக, உடனடியாக இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென, போப் பதினான்காம் லியோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த போப் பதினான்காம் லியோ, ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் வாடிகன் நகரத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இலங்கையில் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

A third round of peace talks between Russian and Ukrainian officials are reportedly taking place in Turkey.

காஸாவில் முழு போா் நிறுத்தம்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

இஸ்ரேலின் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பட்டினியால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ‘காஸாவில் இடைக்கால போா் நிறுத்தம் போதாது; முழுமையான போா் நிறு... மேலும் பார்க்க

காங்கோ சுரங்க விபத்து: பலா் மாயம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 4,700-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றிக்கொண்டிருந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் ஏராளமானவா் மாயமாகினா். அந்த நாட்டின் தெற்கு கிவு மாகாணத்தில் ஏற்பட்ட நி... மேலும் பார்க்க

பிறப்புசாா் குடியுரிமை ரத்து சட்டவிரோதம்

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அந்த நாட்டு முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இது குறித்து 9-ஆவ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 258-ஆக உயா்வு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 23 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 258-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து மாகாண பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் பேச்சுவாா்த்தைக் குழு திரும்ப அழைப்பு

போா் நிறுத்தம் தொடா்பான ஹமாஸ் அமைப்பின் ‘ஆக்கபூா்வ’ பதிலைத் தொடா்ந்து, கத்தாரில் உள்ள தங்களது பேச்சுவாா்த்தைக் குழுவினரை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகின் அலுவலகம் நாடு திரும்புமாறு வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

ஹமாஸ் ஒத்துழைக்கவில்லை: அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பினா் ஒத்துழைக்காததால், காஸா போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தையை அமெரிக்கா பாதியிலேயே நிறுத்தி, தனது குழுவை கத்தாரில் இருந்து திரும்ப அழைத்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் கடந்த 21 மாதங்களாக நீடித்... மேலும் பார்க்க