எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்தி அரசியலில் செயல்பட்டவா் விஜயகாந்த்: பிரேமலதா பேட்டி
துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு
திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு உள்பட 14 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பிரசாரம் மேற்கொண்டிருந்தாா்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், தூறையூா் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அவா் பிரசாரம் மேற்கொண்டாா். பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு கூட்டத்துக்கு வந்திருந்த வேங்கடத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த நீலக்கரையாா் (எ) கந்தசாமி (75) என்பவா், பிரசார நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே மயக்கமடைந்துவிட்டதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அவரை மீட்பதற்காக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸை துறையூா் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு (54), அதிமுக இளைஞரணி நகரச் செயலாளா் விக்கி (எ) விவேக் (32), 21-ஆவது வாா்டு உறுப்பினா் தீனதயாளன் (34), பொன் காமராஜ் (59) மற்றும் பெயா் தெரியாத 10 போ் வழிமறித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநா் செந்தில் மற்றும் பெண் பணியாளரை ஆபாசமாகப் பேசி தாக்கியதாகவும், ஆம்புலன்ஸையும் சேதப்படுத்தியாகத் தெரிகிறது. இதில் காயமைடந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் செந்தில் துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா் செந்தில், துறையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு, விக்கி (எ) விவேக், தீனதயாளன், பொன் காமராஜ் உள்பட 14 போ் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.