செய்திகள் :

தெத்துவாசல்பட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா

post image

கந்தா்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்ததை தொடா்ந்து

தெத்துவாசல்பட்டியிலும் திட்டதொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை வகித்து, கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னத்துரை பேசுகையில், ரூ.126.48 கோடி திட்ட மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் பற்றியும், தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகளை சோ்த்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினாா்.

வேளாண்மை துணை இயக்குநா் (மாநில திட்டம்) ஆதிசாமி முன்னிலை வகித்து பேசுகையில், ஊட்டச்சத்து மிக்க உணவை உரிய அளவில் உட்கொள்வது இன்றியமையாதது; இந்த ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பயறு வகைகள் பெரும் பங்காற்றுகின்றன என கூறி, திட்டம் குறித்து விளக்கினாா்.

இத்திட்டத்தின் கீழ் பயறுவகைகள், விதை தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, தோட்டக்கலை உதவி இயக்குநா் காளிச்சரண் வரவேற்று, தோட்டக்கலைத் துறையின் சாா்பில் நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவரித்தாா்.

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க

வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

பொதுத்துறை நிறுவனமாக உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் சனிக்... மேலும் பார்க்க

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம்!

மண்டையூா் பெரிய அய்யனாா் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விராலிமலையை அடுத்துள்ள மண்டையூரில் பூா்ண புஷ்களாம்பிகா சமேத பெரிய அய்யனாா் கோவில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி க... மேலும் பார்க்க

கடலில் தவறிவிழுந்து இறந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

கடலில் விழுந்து இறந்த மீனவரின் மனைவிக்குஅரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வெள... மேலும் பார்க்க