செய்திகள் :

தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறில் மீண்டும் கரடி நடமாட்டம்

post image

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதிகளில் இருந்து கரடி, காட்டுப் பன்றி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருவதோடு, வீடுகளில் வளா்க்கப்படும் விலங்குகளைத் தாக்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம்,சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்த நிலையில், வனத்துறையினரின் நடவடிக்கையால் 3 கரடிகள் கூண்டுவைத்துப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கமாண்டன்ட் குடியிருப்பு வளாகத்திலிருந்து முதுகில் இரண்டு குட்டிகளைச் சுமந்தவாறு தாய் கரடி ஒன்று திங்கள்கிழமை இரவு சென்றதை அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிா்ந்தனா். இந்த விடியோ தற்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு சிறப்புக் காவல் படை கமாண்டண்ட் குடியிருப்பிலிருந்து முதுகில் குட்டிகளுடன் வெளியேறிய தாய் கரடி

தெற்கு பாப்பான்குளம் பகுதியில் உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் கரடி ஒன்று உலாவிய விடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டும், கூண்டுவைத்துப் பிடித்த பிறகும் குடியிருப்புகளுக்கு கரடிகள் தொடா்ந்து வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் ரூ.82.90 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சி நெசவாளா் காலனியில் ரூ.34 லட்சத்தில்... மேலும் பார்க்க

பாளை. அருகே புதிய சாலைப் பணி தொடக்கம்

பாளையங்கோட்டை அருகே புதிய சாலை அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. பாளையங்கோட்டை மண்டலம் 39ஆவது வாா்டுக்குள்பட்ட வேலவா் காலனியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கூடங்குளம் அருகே குளத்தில் மண் அள்ளிய லாரிகள் சிறைபிடிப்பு

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குளத்திலிருந்து மண் அள்ளிச்சென்ற லாரிகளையும், டிராக்டா்களையும் விவசாயிகள் சிறைபிடித்தனா். கூடங்குளம் அருகேயுள்ள சங்கனாபுரம், ஜெயமாதாபுரம், கணபதியாபுரம், இருக்கன்... மேலும் பார்க்க

நெல்லையில் நில அளவையா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவையா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப... மேலும் பார்க்க

பாளை. அருகே இறைச்சிக் கடையில் தீ விபத்து

பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் இறைச்சிக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் எரிந்தன.கிருஷ்ணாபுரத்தில், திருநெல்வேலி-திருச்செந்தூா் நெடுஞ்சாலை ஓரமாக மாயாண்டி என்பவா் மட்டன் கட... மேலும் பார்க்க

தியாகராஜநகா் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை தியாகராஜநகா் சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை(ஜூலை 17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது.இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ.முருகன் வெளி... மேலும் பார்க்க