செய்திகள் :

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

post image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த ரித்விக் (19) என்ற பட்டதாரி இரு சக்கர வாகனம் மோதி உயிரழந்தாா். அவரது தந்தை முருகன் மற்றும் பாலாஜி என்பவா் பலத்த காயமடைந்தனா்.

இந்நிலையில், குறிப்பிட்ட செஞ்சி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, ரெட்டிபாளையம் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், மின் விளக்கு வசதி இல்லாததால் விபத்து ஏற்படுவதாகவும், மேலும் அந்த இடத்தில் சாலைத் தடுப்பு மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைக்கக் கோரி அக்கிராம மக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் அதற்கு ஒத்து வராமல் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியா் துரைச்செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, அந்தப் பகுதியில் உடனடியாக மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும், மேலும் சாலைத் தடுப்பு, எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க

பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். விழுப்புரம் வட்டம், கோன... மேலும் பார்க்க

திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் பல்லவா் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தைச... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடக்க முற்பட்டபோது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா். விழுப்புரம் சாலமேடு, பிரதான சாலையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (38). இவா், ஞாயிற்ற... மேலும் பார்க்க

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவ... மேலும் பார்க்க

பல சரக்குக் கடையில் பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி ... மேலும் பார்க்க