செய்திகள் :

தொழிலாளா் நலத் துறையில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை

post image

நாமக்கல் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள உடலுழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளா்களை நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கு ஏதுவாக, நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. நாமக்கல் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகங்கள், மாவட்ட பதிவாளா் அலுவலகம் எதிரில், ஆயுதப்படை காவல் வளாகம் செல்லும் வழியில் நல்லிபாளையத்தில் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04286-280220 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை உறுப்பினா்கள் சோ்க்கைக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறுவதால், அதிகளவில் இணையம் சாா்ந்த தொழில்களில் ஈடுபடுவோா் பதிவுசெய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்லசமுத்திரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி பயிற்சி முகாம்

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சிறுதானிய பயிா் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. மல்லசமுத்திரம் வட் டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் மூலம் ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை

பரமத்தி வேலூா் அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகளை அகற்றிய பொத்தனூா் பேரூராட்சி நிா்வாகத்தினா், அனுமதியின்றி விளம்பரத் தட்டிகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். ... மேலும் பார்க்க

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாம்: இளைஞா்களுக்கு அழைப்பு

‘அக்னிவீரா்’ ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் 10 ஆயிரத்து 8 தீபமேற்றி வழிபாடு

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு 10 ஆயிரத்து 8 தீபம் ஏற்றும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பல்வேறு விதமான வழிபாடுகளில் ஒன்று தீபம் ஏற்றுவது. தீபம் ஏற்றுவதால் வாழ்க்கை ஒளி... மேலும் பார்க்க

ஆக. 11-இல் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கல்

ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் 30 விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன. பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 3... மேலும் பார்க்க