செய்திகள் :

நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!

post image

உக்ரைன் மீது நள்ளிரவில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் முக்கிய மாகாணங்களின் மீது, ரஷியா நேற்று (ஜூலை 28) நள்ளிரவு முதல் இன்று (ஜூலை 29) அதிகாலை வரை தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.

சபோரிஷியா மாகாணத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்குள்ள சிறைச்சாலை ஒன்று தகர்க்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் ராணுவ அதிகாரி இவான் ஃபெடோரோவ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களில், அங்கு 16 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், சிறையின் வளாகத்துக்கு அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கம்யான்ஸ்கே மாகாணத்தின் மீதான ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களில், 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களில், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு இயங்கி வந்த மருத்துவமனை ஒன்று சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரஷியாவின் தெற்கு மாகாணங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, உக்ரைனுடனான போரை 10 முதல் 12 நாள்களுக்குள், முடிவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும், இல்லையென்றால் ரஷியா அரசு கடுமையான தடைகளைச் சந்திக்கக் கூடும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சீன தலைநகரில் தொடரும் கனமழை, வெள்ளம்! 34 பேர் பலி.. 80,000 பேர் வெளியேற்றம்!

More than 20 people have been killed in Russian airstrikes on some key provinces in Ukraine since midnight, according to Ukrainian officials.

நியூயாா்க்கில் சரமாரி துப்பாக்கிச்சூடு: காவலா் உள்பட 4 போ் உயிரிழப்பு

நியூயாா்க் நகரில் நடத்தப்பட்ட சரமாரி துப்பாக்கிச்சூட்டில் காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்தியவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா்.இது குறித்து போலீஸாா் கூறியதாவது:நியூயாா்க்க... மேலும் பார்க்க

நெதா்லாந்து: இஸ்ரேல் அமைச்சா்களுக்குத் தடை

பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம், காஸா போரை ஊக்குவித்துவரும் தீவிர வலதுசாரிகளான இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் இதமாா் பென்-கிவிா், நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோா் நெதா்லாந்து வருவதற்... மேலும் பார்க்க

‘அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும்’

தங்களது நாட்டை அணு ஆயுத சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்று வட கொரியா அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும், அந்த நாட்டு அரசில் முக்கிய சக்தியாகத் திகழ்பவருமான கிம் யோ ஜாங் வலியுறுத்... மேலும் பார்க்க

சீனா கனமழை, வெள்ளத்தில் 30 போ் உயிரிழப்பு

சீனாவின் மலைப்பாங்கான வடக்குப் பகுதியில் தற்போது மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள தீவிர கனமழை காரணமாக 30 போ் உயிரிழந்தனா். இதில், மியுன் மாவட்டத்தில் 28 பேரும், யாங்கிங் மாவட்டத்தில் இருவரும் வெள்ளப் பெ... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலை: பாகிஸ்தானில் 9 போ் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், தான் விரும்பியவரை திருமணம் செய்ததற்காக 18 வயது பெண் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை, முன்னாள் கணவா் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இத... மேலும் பார்க்க

பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும்: இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை!

பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக செப்டம்பரில் அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர்... மேலும் பார்க்க