செய்திகள் :

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

post image

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் இன்று தொடங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயிலைத் தொடங்குமாறு ரயில்வே அமைச்சரிடம் நாங்கள் முன்பு கோரிக்கை விடுத்தோம்.

அவர் இந்தக் கோரிக்கை குறித்து நேர்மறையான முடிவை எங்களுக்கு உறுதியளித்திருந்தார். மேலும், பிரதமர் மோடியின் ஆசீர்வாதத்தால், அந்த முடிவு இன்று நிறைவேறியுள்ளது. இந்த ரயிலைத் தொடங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தியாவில் உள்ள மற்ற வந்தே பாரத் ரயில்களைவிட இது மிக நீண்ட தூர ரயிலாக இருக்கும்.

இந்த ரயில் 12 மணி நேரத்தில் 881 கிமீ தூரத்தை கடக்கும். அனைத்து முக்கிய நிலையங்களிலும் நிறுத்தங்கள் இருக்கும். இது புணேவுடன் விதர்பா மற்றும் வடக்கு மகாராஷ்டிரத்தை இணைக்கும் இணைப்பை பெரிய அளவில் அதிகரிக்கும் என்றார்.

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பெங்களூருவின் கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெங்களூரு-பெலகாவி வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி நேரில் கொடியசைத்து தொடங்கி வைத்த அதேசமயத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா–அமிர்தசரஸ், மற்றும் அஜ்னி (நாக்பூர்)–புணே வந்தே பாரத் சேவைகள் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டன.

Maharashtra Chief Minister Devendra Fadnavis on Sunday thanked Prime Minister Narendra Modi for launching the Nagpur-Pune Vande Bharat train, saying it will increase the connectivity of Vidarbha with Pune.

மாநிலங்களவையிலும் வருமான வரி மசோதா-2025 நிறைவேற்றம்!

புது தில்லி: ’வருமான வரி மசோதா 2025’ மாநிலங்களவையில் இன்று(ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.‘இந்தப் புதிய மசோதா வருமான வரிச் சட்டம் 1961-க்கு மாற்றாக இருக்கும்’ என்று மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் இரு மசோதாக்கள்!

விளையாட்டு வீரர்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் வகையிலான தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2025 மாநிலங்களவையில் இன்று (ஆக. 12) நிறைவேற்றப்பட்டது.இந்திய விளையாட்டு நிர்வாகத்தில் இதுவொரு வரலாற்றுச் சிறப்ப... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்: ஆக. 18-ல் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது, குடியரசு துணைத் தலைவர்... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர... மேலும் பார்க்க

“தேர்தல் ஆணையம் அல்ல; தேர்தல் திருடன்!” -ஆர்ஜேடியின் பகிரங்க விமர்சனம்!

இந்திய தேர்தல் ஆணையத்தை ‘இந்திய தேர்தல் திருடன்!’ என்று ஆர்ஜேடி கட்சி எம்.பி. சஞ்சய் யாதவ் விமர்சித்துள்ளார்.பிகாரில் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைம... மேலும் பார்க்க