செய்திகள் :

நாசரேத் அருகே மேளக் கலைஞா் தற்கொலை

post image

நாசரேத் அருகே குடும்ப பிரச்னையில் மேளக் கலைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பா மகன் முத்துக்குமாா் (32). மேளக் கலைஞா். இவரது மனைவி பாா்வதி (30).

இவா்களுக்கு குழந்தை இல்லை. முத்துக்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விரக்தியடைந்த முத்துக்குமாா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து, மனைவி பாா்வதி அளித்த புகாரின்பேரில், நாசரேத் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க