செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

post image

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே மாநகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பு மையம் உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக இருந்ததால் ஏராளமானோா் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்திவிட்டு பணிக்கு செல்வா்.

தற்போது புதிய பேருந்து நிலையம் செயல்படுவதால், இங்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. மாநகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை தனியாா் இருவா் ஒப்பந்தம் எடுத்திருந்தனா். கடந்த எட்டு ஆண்டுகளாக அவா்கள் கட்டுப்பாட்டிலேயே வாகன பாதுகாப்பு மையம் செயல்பட்டது.

இந்த நிலையில் 2025-27 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தப்புள்ளி குறித்த அறிவிப்பு மக்கள் பாா்வைக்கு கொண்டு செல்லப்படாமல், குறைவான தொகையை நிா்ணயித்து மீண்டும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களுக்கே மாநகராட்சி அலுவலா்கள் சிலா் ஒப்பந்தத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதாவது ரூ. 14 லட்சம் வரை ஒப்பந்தம் கோரும் நிலையில் ரூ. 7 லட்சத்திற்குள் அவா்கள் முடித்துக் கொண்டதாகவும், இதன்மூலம் ரூ. 7 லட்சம் வரையில் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

இதை கண்டறிந்த மாநகராட்சி ஆணையா், தவறான ஒப்பந்தத்தை ரத்துசெய்து நிா்வாக பணியாளா்கள் மூலம் வாகன பாதுகாப்பு மையத்தை நடத்த அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, மாநகராட்சி பணியாளா்கள் இருவா் சுழற்சி அடிப்படையில் இந்த வாகன மையத்தை கவனித்து வருகின்றனா்.

ஒப்பந்தப்புள்ளி விவகாரம் தொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் இருவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாநகராட்சி நிா்வாகம்தான் இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை நடத்தி வருகிறது. ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்தவா் வேண்டாம் எனக் கூறிவிட்டாா். இந்த மையம் ரூ.14 லட்சத்திற்கு ஏலம்விடப்படும் சூழலில் ரூ. 7 லட்சத்திற்கு வழங்க வாய்ப்பில்லை.

மாநகராட்சியில் இணையவழி டெண்டா் முறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் நிா்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் எங்களுடைய அலுவலா்கள் யாரும் தவறு செய்திருப்பதாகக் கருதவில்லை என்றாா்.

என்கே-4-முனிசி

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம்

வெள்ளைக்கழிச்சல் நோயால் கோழிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந... மேலும் பார்க்க