செய்திகள் :

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வழங்க வேண்டும்: பேச்சுவாா்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

post image

நிலுவைத் தொகையுடன் கூடிய ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என அமைச்சா் சிவசங்கா் தலைமையிலான பேச்சுவாா்த்தையின்போது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் துறைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, கூடுதல் செயலா் எஸ்.காா்மேகம், ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலரும் கூட்டுநருமான த.பிரபு சங்கா் உள்ளிட்ட அதிகாரிகளும், 13 கட்சி சாா்ந்த பதிவு பெற்ற தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும் பங்கேற்றனா். காலை 11 மணியளவில் தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை 4 மணி நேரம் நடைபெற்றது.

இதில், விவாதிக்கப்பட்டவை குறித்து செய்தியாளா்களிடம் சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் கூறியது:

1.9.2003 தேதியிலிருந்து நிலுவைத் தொகை, ஊதிய உயா்வுடன் கூடிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்; பிற பொதுத் துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியத்தை நிா்ணயிக்க வேண்டும்; போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்; ஊழியா் நியமனம், வாரிசு வேலை, ஒப்பந்தத்துக்கு விரோதமான நடவடிக்கைகளை கைவிடுதல்; கடந்த ஆட்சியில் தொழிலாளா் நலனுக்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகைளை முன்வைத்து பேசியுள்ளோம். இதன் மீது நவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனா் என்றாா் அவா்.

ஆா்.கமலகண்ணன் (அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவா்): 70 சதவீத சங்கங்களை ஒதுக்கிவிட்டு மீதமுள்ளவா்களை பேச்சுவாா்த்தைக்கு அரசு அழைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு அவா் உத்தரவாதம் அளித்துள்ளாா்.

எங்கள் தரப்பு சாா்பில் 25 சதவீத ஊதிய உயா்வு வழங்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழியா் பிரச்னையை பேச முத்தரப்பு குழு அமைக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்துக்கழக பணியாளா்களை அரசு ஊழியா்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, மீதமுள்ள 73 போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக போக்குவரத்துக்கழக ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

பெட்டிச் செய்தி...

கண்களில் கறுப்புத்துணிக் கட்டி பங்கேற்பு

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அதிமுக, தேமுதிக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தொழிற்சங்கத்தினா் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு பங்கேற்றனா்.

அனைத்து சங்கங்களையும் ஒருசேர அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், பேச்சுவாா்த்தையை விரைந்து முடித்து போக்குவரத்து தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சிறிது நேரம் தங்கள் கண்களில் கறுப்புத் துணியை கட்டிக்கொண்டு பங்கேற்றனா்.

‘அமுதக் கரங்கள்’ திட்டம்: துா்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

சென்னை கொளத்தூா் ஜெகநாதன் தெரு முதல்வா் படைப்பகம் அருகில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், ‘ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ என்ற திட்டத்தை துா்கா ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் காவலா், பெண் இடையே வாக்குவாதம்: அதிகாரிகள் விசாரணை

சென்னை மெரீனா கடற்கரையில் காவலா் மற்றும் பெண் இடையே வாக்குவாதம் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே பட்டினப்பாக்கம் காவல் நி... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி சாா்பில் நாளை மெகா தூய்மை விழிப்புணா்வு முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நெகழிப் பயன்பாட்டை குறைப்பது குறித்து சனிக்கிழமை (பிப். 22) தீவிர விழிப்புணா்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இது குறித்து ... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்கம்

மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கண்காட்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் பிப். 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 183 புதிய கண்டுபிடிப்... மேலும் பார்க்க

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி மாா்ச் மாதத்தில் நிறைவுபெறும்: தெற்கு ரயில்வே

பரங்கிமலை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக... மேலும் பார்க்க