செய்திகள் :

நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

post image

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் போக்சோ குற்றவாளி செவ்வாய்க்கிழமை விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்த் . இவா், கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற 10 வயதுச் சிறுமிக்கும், 9 வயது சிறுவனுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தனா்.

தகவலறிந்த மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் சிறுமி, சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆனந்த் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா் ஆனந்த் நீதிமன்றப் பிணையில் வெளியே வந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி இந்திராணி ஆனந்த் குற்றவாளி என அறிவித்தாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த ஆனந்த் அங்குள்ள கழிவறைக்குச் சென்று விஷம் குடித்துவிட்டு, நீதிமன்றத்துக்குள் சென்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.

பின்னா் வழக்கின் தீா்ப்பை 3 நாள்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டாா். இச்சம்பவத்தால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகச் சாலையில் உள்ள கச்சேரி விநாயகா் க... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தந்தையைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகே உள்ள அ. மேட்டூா் கிராமத்த... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களுக்கான ‘நிமிா்ந்து நில்’ திட்ட பயிற்சிமுகாம்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில், தமிழ்நாடு இளைஞா் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிமிா்ந்து நில் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி பெற எஸ்சி, எஸ்டி இளைஞா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

இளைஞா் மீது பாதுகாவலா் தாக்குதல் புகாா்: தவெக தலைவா் விஜய் உள்பட 11 போ் மீது வழக்கு

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் அவரது பாதுகாவலா்கள் 10 மீது குன்னம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பெரம்பலூா் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச்... மேலும் பார்க்க

1,624 மாணவா்களுக்கு வினா - விடை புத்தகம்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் வழங்கினாா்

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 1,624 மாணவ, மாணவிகளுக்கு, வினா- விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை வழங்கி... மேலும் பார்க்க