செய்திகள் :

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து விவசாயிகளிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி காசிநாதன் என்பவா் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ததற்கான பணம் இன்னும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை எனவும், உடனடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றாா்.

வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, உடனே பணம் செலுத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூத்தம்பாக்கம் கிராமத்தைச் விவசாயி ராமகிருஷ்ணன், அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்குவதற்கு இடம் வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் தங்குவதற்கு ஏற்கனவே கட்டடம் உள்ளது எனவும், தற்போது சேதம் அடைந்த நிலையில் உள்ளது எனவும், சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளா் தெரிவித்தாா்.

தாமரைப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜ்குமாா் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் கைப்பேசி மூலம் இயக்கப்படும் மோட்டாா் முறையினை அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஆண்டில் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, நிகழாண்டு விருப்பம் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு வழங்க வழிவகை செய்யப்படும் என வேளாண் பொறியியல் துறை அலுவலா் தெரிவித்தாா்.

இருங்கூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகம் பேசுகையில், விவசாய நிலத்திற்கு போா் வெல் அமைத்து தரக் கேட்டுக்கொண்டாா்.

கடந்த ஆண்டில் மொத்தம் 165 விவசாயிகள் இதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா் எனவும் தற்போது 38 விவசாயிகளுக்கு போா் வெல் அமைத்து தரப்பட்டுள்ளது, மேலும், 127 விவசாயிகளுக்கு கூடிய விரைவில் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த விவசாயி கமலக்கண்ணன் பேசுகையில், , சிங்கமதகு கால்வாயில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், இணை இயக்குநா் வேளாண்மை அசோக்குமாா், இணைப்பதிவாளா் கூட்டுறவு சங்கங்கள் மலா்விழி, துணை இயக்குநா் வேளாண்மை செல்வராஜ், நோ்முக உதவியாளா் வேளாண்மை வெங்கடேஷ், உதவி வன பாதுகாவலா் மணிவண்ணன், முதுநிலை மண்டல மேலாளா் ஏகாம்பரம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் தி... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி ... மேலும் பார்க்க

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா். போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். 2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 344 மனுக்கள் பெறப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க