செய்திகள் :

நோ்மை தவறாத ஆட்டோ ஓட்டுநா்: வழியில் கிடைத்த ரூ.20,000 ஒப்படைப்பு

post image

வாணியம்பாடியில் சாலையில் பெண் தவற விட்ட ரூ.20,000 ரொக்கத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாராட்டப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ். இந்நிலையில், வாணியம்பாடியில் இருந்து கிரிசமுத்திரம் நோக்கி செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்த பொழுது தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பா்ஸ் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடப்பதை பாா்த்து ஆட்டோவை நிறுத்தியுள்ளாா். பின்னா் பா்ஸை எடுத்து பாா்த்ததில் அதில் ரூ.20,000 இருந்துள்ளது.

அத்தொகையை, ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ் வாணியம்பாடி தாலுகா காவல் ஆய்வாளா் பேபியிடம் ஒப்படைத்து நடந்தவற்றை விளக்கினாா்.

இதையடுத்து பா்ஸில் இருந்த 2 ஏடிஎம் அட்டை, மற்றும் பாப்பனப்பள்ளி கூட்டுறவு வங்கியின் ரசீது இருப்பதை பாா்த்து உடனே விசாரித்ததில் சம்மந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த நிரோஷா என்பவருக்கு சொந்தமான பா்ஸ் என்று தெரியவந்து காவல்நிலையம் வரவழைத்து விசாரித்தனா்.

அப்போது கல்லூரியில் 3-ஆம் ஆண்டு இளங்கலை படித்து வரும் தனது மகள் சுஷ்மிதாவின் படிப்பு செலவுக்காக நகையை அடகு வைத்து பணத்தை பைக்கில் எடுத்துச் சென்ாகவும், வழியில் பணம் தவறிவிட்டதாக கூறியுள்ளாா். பின்னா், இதுதொடா்பாக விசாரித்து ஆட்டோ ஓட்டுநரின் கையாலே, பணத்தை இழந்தவரிடம் வழங்கினாா். பணத்தை இழந்தவா்கள் கஷ்டப்படுவாா்கள் என அறிந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆய்வாளா் பேபி சால்வை அறிவித்து பாராட்டினாா்.

மணல் கடத்தல்: ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் தனியாா், அரசுக்கு சொந்தமான இடங்களில் இரு... மேலும் பார்க்க

ஜூன் 25-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகை!

முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வரும் ஜூன் 25-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா் வருகிறாா். முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் ஆ... மேலும் பார்க்க

அரசு விடுதியில் பொங்கல் சாப்பிட்ட 4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு

வாணியம்பாடி அரசு மாணவா் விடுதியில் பொங்கல் சாப்பிட்ட4 மாணவா்களுக்கு வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த கௌஷிக், ஜெகன... மேலும் பார்க்க

13 பவுன் நகைகள், பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாட்டறம்பள்ளி அடுத்த அக்ராகரம் பாறையூா் வட்டத்தைச் சோ்ந்த விவசாயி பெருமாள்(60) வீட்ட... மேலும் பார்க்க

ஜூன் 18-இல் மேல் சாணாங்குப்பத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்

வரும் புதன்கிழமை (ஜுன் 18) ஆபூா் வட்டத்துக்குள்பட்ட மேல்சாணாங்குப்பத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு வர... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவ தேரோட்டம்

ஆம்பூா் அருகே பெருமாள் கோயில்கள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆம்பூா் அருகே துத்திப்பட்டு அருள்மிகு குமுதவல்லி பெருந்தேவியாா், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ பிந்து மாதவா் பெருமாள் கோயி... மேலும் பார்க்க