செய்திகள் :

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

post image

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநிலத்தில் 55 லட்சம் மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்துவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மக்களின் ரேஷனை நிறுத்தியதாக ஒரு வாரத்திற்குள் முதல்வர் குற்றம் சாட்டுவது இது இரண்டாவது முறையாகும்.

இருப்பினும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஏற்கெனவே முதல்வரின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பஞ்சாப் அரசு பொய்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுவரை, பஞ்சாபில் 1.53 கோடி மக்கள் ரேஷன் பெற்று வந்தனர், ஆனால் பாஜக அரசு 55 லட்சம் பேருக்கு இந்த வசதியை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. மூன்று ஏழைக் குடும்பங்களில் ஒன்றுக்கு ரேஷன் மறுக்கப்படுகிறது.

இது வெறும் அரசாங்க முடிவு மட்டுமல்ல, பஞ்சாபின் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சாதாரண குடும்பங்களின் மீதான நேரடித் தாக்குதல்.

மத்திய அரசு ஜூலை முதல் பஞ்சாபின் 23 லட்சம் ஏழை மக்கள் தங்கள் தகவல்களைப் புதுப்பிக்கவில்லை என்று அவர்களுக்கு ரேஷன் வழங்குவதை நிறுத்தியுள்ளது. செப்டம்பர் முதல் சுமார் 32 லட்சம் பஞ்சாபியர் ஏழைகள் இல்லை என்று கூறி அவர்களுக்கு ரேஷன் வழங்குவதை பாஜக நிறுத்தப் போகிறது. மொத்தம் 55 லட்சம் ஏழைகளின் ரேஷன் வழங்குவதை நிறுத்தப் பாஜக திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பஞ்சாப் மக்களாகிய நாங்கள் உணவு தானியங்களைப் பயிரிட்டு முழு நாட்டிற்கும் உணவளிக்கிறோம். ஆனால் அதே பஞ்சாபின் மக்களுக்கு மத்திய அரசு உணவளிக்க மறுக்கிறது. இது நியாயமா?" என்று அவர் கூறினார்.

ஒரு வீட்டில் ஒருவர் வேலை செய்தால் அல்லது கார் வைத்திருந்தால், முழு குடும்பமும் பணக்காரர்களாக மாறுமா? இதனால் முழு குடும்பத்தின் (ரேஷன்) அட்டைகளையும் நிறுத்துவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பினார்,

பஞ்சாபின் யதார்த்தத்தை பாஜக புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தில்லியில் ஏசி அறைகளில் அமர்ந்திருக்கும்போது, ​​கிராமங்களின் ஏழை மக்களின் உணவின் கணக்கு வைக்கப்படுகிறது என்றார். பாஜக பஞ்சாபை பழிவாங்க விரும்புகிறது. பயப்பட வேண்டாம் உங்கள் சகோதரர் பகவந்த் மான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார், மக்கள் பீதி அடைய வேண்டாம். யாருடைய ரேஷன் கார்டும் தகுதி நீக்கம் செய்யப்படாது என்று முதல்வர் கூறினார்.

Punjab Chief Minister Bhagwant Mann on Monday charged the BJP-led Centre with "hatching a conspiracy" to stop free ration to 55 lakh people in the state, and asserted that he would not let people's rights be "snatched".

இந்தியா - பாக். சண்டை: அமெரிக்காவின் வர்த்தக ரீதியான மிரட்டலால் முடிவுக்கு வந்தது! -டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை என்னுடைய முயற்சியாலே முடிவுக்கு வந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்: “அனைத்து சண்டைகள... மேலும் பார்க்க

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியா... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இ... மேலும் பார்க்க

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பா... மேலும் பார்க்க

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள... மேலும் பார்க்க