செய்திகள் :

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? - இளைஞரிடம் போலீஸார் விசாரணை

post image

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர்.

அந்த மாணவர், அவரது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றதாக மற்றொரு இளைஞர் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கு மாணவரின் தந்தை சென்றார்.

அங்கு படுக்கையில்மாணவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் அவரது 19 வயது நண்பர் அமர்ந்து இருந்தார். அவரது தந்தை மருத்துவரை வரவழைத்து சோதித்து பார்த்தார். இதில் அந்த பதின்பருவ மாணவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர் கூறினார்.

மரணம்

இது குறித்து அவர் நண்பரிடம் விசாரித்தபோது, குடிக்க குளிர்பானம் கொடுத்ததாகவும், குடித்தவுடன் வாந்தி எடுத்ததாகவும் அவரது நண்பர் தெரிவித்தார்.

இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவரின், நண்பரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில்,''குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்றார்.

போலீஸாரின் விசாரணையில், நான்கு மாதத்திற்கு முன்பு அந்த மாணவரை 19 வயது நண்பர் நாக்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவர் தனது பெற்றோரிடம் சொல்லாமல் நாக்பூர் சென்று வந்தார். வந்த பிறகு நண்பரிடம் இருந்து விலகி இருக்கும்படி அவனது பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே மாணவரும், அவரது நண்பரை சந்திப்பதையும், பேசுவதையும் தவிர்த்தார். இதனால் அந்த வாலிபர் கோபத்தில் மாணவரை கொலை செய்யதிட்டமிட்டதாக தெரியவந்துள்ளது. 16 வாலிபருக்கும், 19 வாலிபருக்கும் `தன்பாலின ஈர்ப்பு' இருந்ததாக கூறப்படுகிறது.

தஞ்சாவூர்: ”கடை வாடகை பணம் பிரிப்பதில் தகராறு”- தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன் கைது!

தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர... மேலும் பார்க்க

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிக... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் நெருக்கம்; ஹோட்டலுக்கு சென்ற இளைஞரிடம் கைவரிசை காட்டிய கும்பல்.. 21 பேர் கைது!

டேட்டிங் செயலி மூலம் ஆண், பெண் அறிமுகமாகி நண்பர்களாகின்றனர். இந்த நட்பு சில நேரத்தில் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. இந்த டேட்டிங் ஆப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்... மேலும் பார்க்க

`அன்று அதை விரும்பவில்லை, கட்டாயபடுத்தி உறவுகொண்டதால்...' - புனே பாலியல் புகாரில் திருப்பம்

புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார்... மேலும் பார்க்க

கரூர்: வழக்கறிஞரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக நிர்வாகி கைது; மா.செ காட்டம்; நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் கிரிப்ஸ்சன் என்பவர் கரூர் கோதூர் பகுதியில் 7 ஏக்கர் நிலம் வாங்குவது தொடர்பாக, கரூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.ராஜா என்ற நில தரகரிடம் முன்பணமாக, ரூ.96 லட்சம் கொடுத்து... மேலும் பார்க்க

ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அடுத்தக்கட்ட விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும் ... மேலும் பார்க்க