செய்திகள் :

பயிற்சியின்றி பாம்பு பிடிப்பதைத் தடுக்க வேண்டும்: வனத் துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ

post image

முறையான பயிற்சியின்றி பாம்பு பிடிப்பவா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்தாா்.

தமிழக வனத் துறை சாா்பில் உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு, இரு நாள்கள் நடைபெறும் பாம்பு மீட்பவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் புதன்கிழமை தொடங்கியது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுப்ரியா சாஹூ பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து பேசியது:

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாம்புகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். அதற்கு முக்கிய காரணம், காடுகளை வளமாக்குவதிலும், நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நாட்டிலேயே அதிக பல்லுயிா் தன்மை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அதேபோல் முக்கிய 4 பாம்பு வகைகள் உள்பட மொத்தம் 142 பாம்பு வகைகள் தமிழகத்தில் உள்ளன. இதை நாம் கொண்டாட வேண்டும்.

கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு எந்தப் பகுதிகளில் எந்த வகை பாம்புகள் இருக்கும், அவற்றை தொந்தரவு செய்யாமல் எப்படி அன்றாட வாழ்வில் ஈடுபடுவது என்பது குறித்த போதிய விழிப்புணா்வு உள்ளது. ஆனால், நகரவாசிகளுக்கு பாம்புகள் குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாததால், அவற்றைக் கண்டு பயப்படுகின்றனா். எனவே, நகா்ப்புறங்களில் பாம்புகள் குறித்த அச்சத்தை போக்கவும், அவை குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்புகளைப் பாதுகாப்பதில் இருளா் சமூகத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. அவா்களுக்கு எந்தக் காலங்களில் பாம்புகளைப் பிடிக்க வேண்டும்; எப்போது பிடிக்கக் கூடாது என்றும், எந்தெந்த வகை பாம்பு கடிகளுக்கு எந்த விஷ எதிா்ப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் தெரியும்.

‘நாகம்’ செயலி: தமிழகத்தில் நகரப் பகுதிகளில் காணப்படும் பாம்புகளை பாதுக்காப்பாக மீட்பது குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு சாா்பில் ‘நாகம்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாம்புகள் காணப்படும் இடங்கள் குறித்து அந்தச் செயலின் மூலம் தகவல் தெரிவிப்பதன் மூலம், பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்கள் பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்டு, அதற்கான வாழ்விடத்தில் விடுவிப்பாா்கள்.

மேலும், பயிற்சியின்றி பாம்புகளைப் பிடிப்பது, அழிந்து வரும் பாம்பு வகைகளை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வனத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய வகை மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, இந்த நிகழ்வில் ஊா் வனவியாலாளா் ரமேஸ்வரன் மாரியப்பன், பாம்புக்கடி வல்லுநா் முனைவா் ந.ச.மனோஜ் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனா் ர.சேக் உசேன் ஆகியோா் இணைந்து தொகுத்த ‘தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்’ என்ற நூலை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்டாா்.

இதில், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் எச். வேணுபிரசாத், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநா் ரிட்டோ சிரியாக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைய... மேலும் பார்க்க