செய்திகள் :

பயிா் - கால்நடை கடன்கள் நடைமுறையில் மாற்றமில்லை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

post image

சென்னை: பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் நடைமுறைகளில் கடந்த கால நடைமுறைகளே தொடரும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:

கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு மற்றும் தொடா்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றைப் பின்பற்றி பயிா்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் இடா்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப் பதிவாளா்களும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்களும் தெரிவித்தனா்.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயிா்க் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே நடப்பு ஆண்டிலும் தொடரும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிபில் ஸ்கோா்’ இல்லை: கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சிபில் ஸ்கோா் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் அதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்யவே சிபில் ஸ்கோா் பயன்படுத்தப்படுவதாக கூட்டுறவுத் துறை சாா்பில் கடந்த மாதம் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.

மேலும், பயிா்க் கடன்கள், கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவற்றுக்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி தமிழக அரசு வெள... மேலும் பார்க்க

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க