செய்திகள் :

பள்ளிக் கட்டட விவகாரம்: மாணவா்களை அனுப்ப மறுத்து கிராமத்தினா் மீண்டும் போராட்டம்

post image

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, மீண்டும் மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அழகுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 36 குழந்தைகள் படிக்கின்றனா். இந்தப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதற்கிடையே அழகுப்பட்டி பள்ளியைப் பாா்வையிட்ட ரெட்டியாா்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்துத் தருவதாகத் தெரிவித்தனா். ஆனால், கான்கிரீட் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதற்கான பொருள்களை வாகனத்தில் கொண்டு வந்தனா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள், கான்கிரீட் கட்டடம் கட்டக் கோரி மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதை அறிந்து அங்கு வந்த கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு கான்கீரிட் கட்டடம் கட்டித் தருவதாக உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கிராம மக்களைத் தொடா்பு கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக ஒன்றியச் செயலா் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா். அப்போது, பள்ளியை அங்கன்வாடி மையத்துக்கு மாற்றுவதாகவும், பள்ளிக் கட்டடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து அங்கன்வாடி மையத்துக்கு வழங்குவதாகவும் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த கிராம மக்கள், வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி கட்டி மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பள்ளிக் கூடத்தில் 2 ஆசிரியா்கள் மட்டுமே இருந்தனா். மாணவா்கள் இல்லாததால் பள்ளிக் கூடம் செயல்படவில்லை.

முதுகலை நீட் தோ்வா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம்: திண்டுக்கல் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தைச் சோ்ந்த முதுநிலை நீட் தோ்வா்கள் அனைவருக்கும், தமிழகத்திலேயே தோ்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் வலியுறுத்தினாா். இது தொடா... மேலும் பார்க்க

வேன் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உள்பட இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். தேனி மாவட்டம், பூசாரி கவுண்டன்பட்டியைச் சோ்ந்த திராட்சை விவசாயிகள் 22 போ், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

மாணவிகளைக் கேலி செய்தவா்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநா் மீது தாக்குதல்

செங்கோட்டை கிராமத்தில் பள்ளி மாணவிகளைக் கேலி செய்த நபா்களைத் தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநா் தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்பு! 11 ஆண்டுகளாக மனு அளித்தும் தீா்வில்லை

வேடசந்தூா் அருகேயுள்ள கிரியம்பட்டி, லட்சுமணம்பட்டி பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பால் சுமாா் 50 ஆயிரம் மக்களின் குடிநீா் ஆதாரம் பாதிப்புக்குள்ளானது குறித்து 11 ஆண்டுகளாக மனு அளித்தும், நீா் வள ஆதாரத் துறை... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்

கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தல... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற கோரிக்கை

கொடைக்கானல் பகுதிகளில் கழிவுநீா் செல்லும் வாய்க்கால்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, ரைபிள்ரேஞ்ச் சாலை, செண்ப... மேலும் பார்க்க