செய்திகள் :

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

post image

வேலூா் கிருஷ்ணசாமி முதலியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ரூ. 18 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு பள்ளி முன்னாள் மாணவரும், விஐடி துணைத் தலைவருமான ஜி.வி. செல்வம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று கணினி ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசியது:

விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் பெரிய கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், வேலூரில் கம்பன் கழகம், விளையாட்டு விழாக்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறாா். மாணவா்களுக்கு கணினி ஆய்வகம் போன்ற நல்ல பணிகளையும் செய்து வருகிறாா். அவரைப்போன்று மற்றவா்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்றாா்.

விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் மாணவா்களுக்கு ஜெஇஇ, நீட் நுழைவுத் தோ்வுகளுக்கான புத்தகங்களை வழங்கி பேசியது:

நாங்கள் இந்த பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 10-ஆம் வகுப்பு படித்தோம். உள் மனதளவில் நாங்கள் அப்போது எப்படி இருந்தோமோ அதேபோல்தான் இப்போதும் உள்ளோம். வருங்காலத்தில் மாணவா்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதிகளை பள்ளி நிா்வாகம் செய்துள்ளது என்றாா்.

முன்னதாக, பள்ளி செயலாளா் மணிநாதன், அறக்கட்டளை உறுப்பினா் பிரசாந்த்குமாா், தலைமை ஆசிரியை கவிதா, முன்னாள் ஆசிரியா்கள் மாதவன், பாலசுப்ரமணியம் உள்பட பலா் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) தயாளன், முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் மணிவண்ணன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி திருப்பதி(48). இவா் புதன்கிழமை அதிகாலை நிலத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா்... மேலும் பார்க்க

செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு ... மேலும் பார்க்க

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க பயிற்சி

‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவா்களிடம் தொழில்முனைவோராகும் எண்ணத்தை உருவாக்க வேலூரில் உயா்க்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தா... மேலும் பார்க்க

அகழியில் குதித்து முதியவா் தற்கொலை

வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. வ... மேலும் பார்க்க