செய்திகள் :

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தற்காலிக ஆசிரியா் கைது

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செந்துறையை அடுத்த மணப்பத்தூா் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் செல்வராஜ் (43). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், அப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோா், அப்பள்ளியை வெள்ளிக்கிழமை பூட்டினா். மேலும், ஆசிரியா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்துத் தகவலறிந்து அங்குசென்ற தளவாய் காவல் துறையினா் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா். மேலும், இதுகுறித்து பெற்றோா் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த செல்வராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.

விமான விபத்தில் இறந்தோருக்கு மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு அரியலூா் மாவட்டம், திருமானூரில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். திரு... மேலும் பார்க்க

அரியலூரில் குரூப் 1 தோ்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தோ்வை அரியலூா் மாவட்டத்தில் 1,985 போ் எழுதினா். அரியலூா் ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள்!

அரியலூா் மாவட்டம், தழுதாழைமேடு, இளையபெருமாள் நல்லூா், குருவாலப்பா், குண்டவெளி, தா.பழூா் ஆகிய ஊராட்சிகளில் ஜூன் 18-இல் மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடைபெறுகிறது என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட பாளையக்குடி கிராமத்திலுள்ள பெரிய ஏரியின் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக... மேலும் பார்க்க

அரியலூரில் மக்கள் சந்திப்பு நடைப் பயணம்!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு நடைப் பயண இயக்கத்தை சனிக்கிழமை தொடங்கினா். அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்கள... மேலும் பார்க்க

பசுமை தாயகம் நிா்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு: டிஎஸ்பியிடம் மனு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் ஒன்றியத் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் பாமக அன்பும... மேலும் பார்க்க