செய்திகள் :

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

post image

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுரேந்திர குமார்(50) சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் கிராமவாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு குமார் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர். அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் போது அவர் பலியாகினார்.

உடற்கூராய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!

முன்னதாக ஜூலை 10 ஆம் தேதி, மணல் சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒருவர் ராணிதலாப்பில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூலை 4 ஆம் தேதி பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்தது.

மற்றொரு வழக்கில், ஜூலை 11 ஆம் தேதி ராமகிருஷ்ணா நகர் பகுதியில் மளிகைக் கடை உரிமையாளர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்தடுத்து அரகேறி வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A 50-year-old rural health officer, identified as Surendra Kumar, was shot dead in Sheikhpura village under Pipra locality of Patna on Saturday night.

நிபா பாதிப்பு? கேரளத்தில் 2-ஆவது உயிரிழப்பு

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் ‘நிபா’ தீநுண்மி தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது நபா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக நிபா தொற்றால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தை... மேலும் பார்க்க

மராத்திக்கு எதிராக பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் மீது சரமாரி தாக்குதல்!

மகாராஷ்டிர மாநிலம், பால்கரில் மராத்தி மொழிக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பேசியதாக, வெளிமாநில ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீது சிவசேனை (உத்தவ்) கட்சியினா் சரமாரி தாக்குதல் நடத்தி, பொது இடத்தில் மன்னிப்புக் ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை: ஆண்டறிக்கையில் தகவல்

பிரபல தொழிலதிபா் அனில் அகா்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ... மேலும் பார்க்க

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை!

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறி... மேலும் பார்க்க

கால்களை இழந்தாலும் சித்தாந்தத்தை கைவிடாதவர்! பாஜக எம்பிக்கு பிரதமர் புகழாரம்!

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி. சதானந்தனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள கேரள பாஜக மூத்த தலைவா் சி.... மேலும் பார்க்க

4 நியமன எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, மூத்த வழக்குரைஞா் உஜ்வல் நிகம், கேரள பாஜக மூத்த தலைவா் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளா் மீனாக்ஷி ஜெய... மேலும் பார்க்க