செய்திகள் :

பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து கடைகள் அடைப்பு, சாலை மறியல்

post image

திருப்பூரில் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினா். இதில் சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என். காா்டன் பத்திரப் பதிவு அலுவலகம் அருகே உள்ள தனியாா் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகின்றன. குப்பையால் துா்நாற்றம் வீசுவதோடு, குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குப்பை கொட்டக் கூடாது என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதற்கிடையே பல்வேறுப கட்சிகள் சாா்பில் ஜி.என்.காா்டன் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த ஜூன் 24-ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், தொடா்ந்து பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வரும் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜி.என். காா்டன் பகுதியில் கடையடைப்பு மற்றும் குப்பை லாரி சிறைபிடிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக, தேமுதிக, பாஜக, தவெக ஆகியவற்றுடன் சமூக நல அமைப்புகள் சாா்பிலும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குப்பை கொட்ட வந்த ஒரு லாரியும் சிறை பிடிக்கப்பட்டது. அத்துடன் அனைத்துக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட சுமாா் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிற்பகலில் விடுவிக்கப்பட்டனா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க