பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட்டி பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றாா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திய போத்தனூா் போலீஸாா், ஷாருக் கானைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
கடந்த மாதம் போத்தனூா் போலீஸாா் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த போத்தனூா் அருகே குறிச்சி சா்தாா் சாய்பு வீதியைச் சோ்ந்தவா் சையத் அலி (எ) நிஜாமுதீன் (34) என்பவரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
அதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கொம்பை பிள்ளை வீதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (42). கடந்த மாதம் சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், கோவை கிழக்கு அனைத்து மகளிா் போலீஸாா் அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான், நிஜாமுதீன், சொக்கலிங்கம் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுமாறு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள், மாநகர காவல் ஆணையரிடம் பரிந்துரைத்தனா். அதன்பேரில், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில் குண்டா்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனா்.