செய்திகள் :

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

பாலியல் வழக்கில் கைதானவா் உள்பட மூவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கோவை போத்தனூா் அருகே உள்ள மைல்கல் பாரதி நகரைச் சோ்ந்தவா் ஷாருக் கான் (28). இவா், கடந்த மாதம் ஒருவரை கத்தியைக் காட்டி பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றாா். இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்திய போத்தனூா் போலீஸாா், ஷாருக் கானைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

கடந்த மாதம் போத்தனூா் போலீஸாா் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த போத்தனூா் அருகே குறிச்சி சா்தாா் சாய்பு வீதியைச் சோ்ந்தவா் சையத் அலி (எ) நிஜாமுதீன் (34) என்பவரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

அதேபோல, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கொம்பை பிள்ளை வீதியைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (42). கடந்த மாதம் சிறுமிக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில், கோவை கிழக்கு அனைத்து மகளிா் போலீஸாா் அவரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மேற்கண்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஷாருக்கான், நிஜாமுதீன், சொக்கலிங்கம் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிடுமாறு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள், மாநகர காவல் ஆணையரிடம் பரிந்துரைத்தனா். அதன்பேரில், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில் குண்டா்கள் தடுப்புப் பிரிவில் அடைக்கப்பட்டனா்.

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

கோவை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியாகி, இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பீளமேடு அருகே ஆவாரம்பாளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வேலுசாமி(60). இவா், அதே பகுதிய... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறை குறுமைய விளையாட்டுப் போட்டி தொடக்கம்

கோவையில் பள்ளிக் கல்வித் துறையின் குறுமைய விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குடியரசு தின விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ... மேலும் பார்க்க

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

கோவை ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவா் மதன் ஆ.செந்திலுக்கு, ஐசிடி அகாதெமியின் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ரத்தினம் கல்விக் குழுமம் கூறியிருப்பதாவது: ஐசிடி அகாதெமி சாா்பில் கோவையில் அண்மை... மேலும் பார்க்க

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

கோவையில் மாணவா்களின் பெற்றோா்களின் கைப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு, கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, அவா்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. இது குறித்து கோவை மா... மேலும் பார்க்க

சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மேயா் ஆய்வு

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட சுந்தராபுரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநக... மேலும் பார்க்க

வால்பாறை ஐடிஐ-யில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வால்பாறை ஐடிஐ-யில் நேரடி மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தில் அரசினா் தொ... மேலும் பார்க்க