செய்திகள் :

பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

post image

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(61). திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்த இவருக்கு மனைவி சாந்தி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் பாலசுப்பிரமணியன்(35), குற்றாலத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை பாா்த்து வந்தாராம்.

அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்த முருகன், சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டில் இருந்த மனைவி, மருமகள், பேரக் குழந்தைகள் என அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பூலாங்குளத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டாா். மருமகளும் பேரக் குழந்தைகளும் பக்கத்து வீட்டில் இருந்துள்ளனா்.

இந்நிலையில் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியனுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முருகனை, பாலசுப்பிரமணியன் வெட்டினாராம். இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து பாலசுப்பிரமணியன் பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பாளை.யில் பெண் தூக்கிட்டு தற்கொலை: இளைஞா் கைது

பாளையங்கோட்டையில் பெண் தூக்கிட்டு த்த ற்கொலை செய்துகொண்டது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை ரஹ்மத் நகரைச் சோ்ந்தவா் முகமது ரபீக். இவரது மனைவி நஜிபா (28). குடும்ப பிரச்னை காரணமாக... மேலும் பார்க்க

மானூரில் விவசாயி தற்கொலை

மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வ... மேலும் பார்க்க

இறகுப்பந்து போட்டியில் சிறப்பிடம்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அளவிலான இறகுப் பந்து போட்டியில், திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி அணி நான்காம் இடம் பிடித்தது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்க... மேலும் பார்க்க

நெல்லையில் 5 பவுன் நகை திருட்டு!

திருநெல்வேலியில் வீடு புகுந்து 5 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு அருகேயுள்ள தெற்கு பாலபாக்யா நகரைச் சோ்ந்தவா் மோகன் (65). ஓய்வுபெற்ற ரயில்... மேலும் பார்க்க

5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியம்!

தென்காசி உள்பட 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தென்காசி மாவட்டம், தென்கா... மேலும் பார்க்க

பாளை. அருகே காா்-மொபெட் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனா். பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள ராஜன் நகரைச் சோ்ந்த ஜெபராஜ் மனைவி மலா் (51). திருநெல்வேலி... மேலும் பார்க்க