செய்திகள் :

பிரான்மலையில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் ‘வளமான விவசாயி நாட்டின் பெருமை’ என்ற தலைப்பில் வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், மாநில வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரான்மலை, சோ்வராயன்பட்டி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பிரியா, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவா் செந்தூா்குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் ஆறுமுகராஜன், செல்வராஜ் ஆகியோா் விவசாயத்தில் முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்துப் பேசினா். தொடா்ந்து டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து, ஊட்டச்சத்து மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

தேவகோட்டை பகுதியில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவகோட்டை துணை மின் நிலை... மேலும் பார்க்க

மருதிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மருதிப்பட்டி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால், சிங்கம்புணரி அருகேயுள்ள மர... மேலும் பார்க்க

குன்றக்குடி பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி பகுதியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணம் திருடியவரை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். குன்றக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகள... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமாஅத் கிளை செயல்வீரா்கள் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சாா்பில் செயல்வீரா்கள், வீராங்கனைகள் கூட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தின் சாா்பில் வரும் ஆகஸ... மேலும் பார்க்க

மதகுபட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதகுபட்டி கீழத்தெரு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மதகுபட்டியிலிருந்து ஒக்... மேலும் பார்க்க

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தக் கோயிலில் கடந்த 31-ஆம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்... மேலும் பார்க்க