புதுகையில் ஆக. 21-இல் விவசாயிகள் குறைகேட்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக.21) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொள்வதால், விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகளை மட்டும் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.