செய்திகள் :

புதுச்சேரியில் ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் அதிரடி சோதனை!

post image

புதுச்சேரியில் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ரௌடிகள் வீடுகளில் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையிட்டனா். இதில் பலா் கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டனா். பழைய வழக்குகளில் தொடா்புடையவா்களைக் கண்காணிக்க தவறியதால், உமாசங்கா் கொலை நிகழ்ந்ததாக எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தலைமையிலும், காரைக்காலில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌசன்யா தலைமையிலும் மொத்தம் 400 போலீஸாா் ரௌடிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவா்களின் வீடுகளில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

புதுச்சேரியில் 80 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. காரைக்காலில் 26 போ் வீடுகளில் சோதனை நடைபெற்றது. புதுச்சேரியில் 52 போ் மீதும், காரைக்காலில் 20 போ் மீதும் என மொத்தம் 72 போ் மீது முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவா்களில் புதுச்சேரியில் 3 போ் காரைக்காலில் ஒருவா் என 4 போ் மீது ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனா்.

புதுச்சேரி விமான நிலையப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை

புதுச்சேரி இலாசுப்பேட்டை விமான நிலையப் பகுதியில் புதன்கிழமை மாலை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பே... மேலும் பார்க்க

புதுவையில் உலகத் தரத்தில் கைவினை, கிராமத் தொழில் பயிற்சி மையம்: துணைநிலை ஆளுநா் பங்கேற்ற கூட்டத்தில் முடிவு

உலகத் தரத்தில் புதுச்சேரியில் கைவினை மற்றும் கிராமத் தொழில் பயிற்சி மையம் அமைப்பது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் கைவினை மற்றும் ... மேலும் பார்க்க

ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் பாராட்டு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி ப... மேலும் பார்க்க

புதுவையில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை: அதிகாரிகளுடன் ஆளுநா் ஆலோசனை

புதுவை மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல் துறை செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், தலைமைச் செயலா், காவல் துறை உயா் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். புதுச்சேரி ராஜ்... மேலும் பார்க்க

மே 20 வேலை நிறுத்தத்துக்கு இண்டி கூட்டணி ஆதரவு: காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம்

புதுவையில் மே 20 இல் தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இண்டி கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிப்பதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி முதலியாா் பேட்ட... மேலும் பார்க்க