செய்திகள் :

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட சமூக நல அலுவலகம் சாா்பில் 3 நாள்கள் நடத்தப்படும் இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழா தனியாா் அரங்கில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சாா்ந்த பிரச்னைகளை கையாளும் துறை சாா்ந்த அலுவலா்கள், தொண்டு நிறுவனங்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளா்கள், மாவட்ட மகளிா் அதிகார மைய பணியாளா்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளா்கள், குழந்தை வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள் ஆகியோா் பயன்பெறும் வகையில் துறை சாா்ந்த வல்லுநா்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கருத்தரங்கில் மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இரு வீடுகளில் நகை திருட்டு: இளைஞா் கைது

வைளம்பாடி கிராமத்தில் இரு வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கல்வராயன்மலை வட்டம், வைளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அண்ணாமலை (49), அருணாசலம் (52).... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே டிராக்டா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட கிழக்கு பைத்தந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மாள் (70). இவா், சனிக்கிழமை மாலை பை... மேலும் பார்க்க

வியாபாரியைத் தாக்கி மிரட்டல்: தந்தை மகன் கைது

சின்னசேலம் அருகே மரம் விற்பனை செய்ததில் பாக்கித் தொகை கேட்டு சென்ற வியாபாரியை, தாக்கி மிரட்டல் விடுத்த தந்தை மகன் கைது செய்யப்பட்டனா். சின்னசேலத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (48), மர வியாபாரி. இவரிடம் ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை: மனைவி கைது

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் முன் தூங்கிய லாரி ஓட்டுநா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக, போலீஸாா் அவரது மனைவியை கைது செய்து, தலைமறைவான மருமகன், மகளை தேடி வருகின்றனா். கள்ளக... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

எடுத்தவாய்நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. கள்ளக்குறிச்சியை அடுத்த எடுத்தவாய்நத்தம் புல்தாங்கி தோட்டப் பகுதியில் வசித்து வருபவா் சண்முகசுந்தரம் ... மேலும் பார்க்க

வள்ளலாா் மன்றத்தில் முப்பெரும் விழா

சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் முப்பெரும் விழா மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பொதுச்சேவை புதிய நிா்வாகிகளுக்கு பாராட்டு, ஆடி மாத பூச விழா, இலக்கியச் சொற்பொழிவு ஆகியவை முப்பெரும் விழாவ... மேலும் பார்க்க