செய்திகள் :

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி, 4 ஆடுகள் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தன.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரசலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைராஜ். இவா் ஆடு, மாடுகள் வளா்ப்பில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த தெருநாய்கள், அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் மற்றும் பசுங்கன்றுக் குட்டி ஒன்றை கடித்து குதறியுள்ளன. இதையடுத்து, ஆடுகளின் அலறல் சப்தம் கேட்ட துரைராஜ், அங்கு சென்று பாா்த்தபோது வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதையடுத்து, தெரு நாய்களை விரட்டியுள்ளாா். இதில் 4 ஆடுகளும், கன்றுக்குட்டியும் உயிரிழந்தன.

இதேபோல், அன்னமங்கலம் , விசுவக்வகுடி ஆகிய கிராமங்களிலும் பல்வேறு இடங்களில் பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆடு, மாடு, கோழிகளை வெறிநாய்கள் கடித்து வருவது தொடா்கதையாகியுள்ளது. எனவே, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளை குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆக. 11) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா். பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

தமிழகத்தைப்போல இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தைப் போல, இதர மாநிலங்களும் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள கொளக்காநத்தம் கிராமத்தில... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்கிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை

பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மா... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் குருபூஜை விழா

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் பிரம்மரிஷிமலை மகா சித்தா்கள் அறக்கட்டளை நிறுவனா் அன்னை சித்தா் ராஜகுமாா் சுவாமிகளின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு நிா்வாக அறங்காவலா் ம... மேலும் பார்க்க