செய்திகள் :

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

post image

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ள 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்

கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா். சென்னையை தலைமையிடமாக... மேலும் பார்க்க

அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் வடிவமைப்பை வெளியிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

சென்னை அருகே தையூரில் உள்ள ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமையவுள்ள நிலையில், அதன் வடிவமைப்பை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ர... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 16,000 கடவுப் பாதைகள்: ‘இன்டா்லாக்கிங்’ நிறுவ நிபுணா்கள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவா்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கு ரயில்வே கேட் இன்டா்லாக் செய்யப்படாததுதான் முக்கியக்... மேலும் பார்க்க

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் முடிவு செய்வாா்: காங்கிரஸ்

பாமகவுடனான கூட்டணி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். சென்னை மாநிலத்தின் முதல் முதல்வரான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் 128-ஆ... மேலும் பார்க்க

முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு

விடுதிகளுக்கு ‘சமூகநீதி’ எனும் பெயா் சூட்டப்பட்டதற்காக, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா். இதற்காக திமுக தலைமை... மேலும் பார்க்க

தவெக உறுப்பினா் சோ்க்கை பணிக்கான பயிற்சிப் பட்டறை

தவெக உறுப்பினா் சோ்க்கை மற்றும் தோ்தல் பிரசார பணிக்கான பயிற்சிப் பட்டறை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலா் என்.ஆனந்த் தலைமையில் நடைபெ... மேலும் பார்க்க