செய்திகள் :

பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

post image

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, திருவாரூா் - திருச்சி இடையே மட்டுமே இயங்கும்.

மேலும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 25, 27, 28 ஆம் தேதிகளில் பாலக்காடு - குளித்தலை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் குளித்தலை - பாலக்காடு இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 25, 27, 28 ஆம் தேதிகளில் திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் கரூா் - திருச்சி இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

தாமதப் புறப்பாடு: காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயிலானது (56817) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 30 நிமிஷங்கள் நின்று தாமதமாகப் புறப்படும்.

மணப்பாறையில் பாஜக நிா்வாகி தற்கொலை: கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பாஜக நகர மண்டல் துணை பொதுச் செயலாளா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அக்கட்சி நிா்வாகிகள் 2 போ் உள்பட மூவரை போலீஸாா் வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26)... மேலும் பார்க்க

மனைவியை வெட்டிய வழக்கில் கணவா் கைது

திருவெறும்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் கணவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் ஃபாத்திமாபுரத்தைச் சோ்ந்தவா் வீரமணி. இவரின் மனைவி சக்திஜீவா. இ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி புத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக உறையூா் போலீஸாருக்கு செவ்வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மலைக்கோயில் வஉசி தெருவில் வீட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய... மேலும் பார்க்க