செய்திகள் :

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்னுடைய முதல்கடமை: கனிமொழி எம்.பி.

post image

மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் எனது முதல் கடமை என திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினா் சோ்க்கையானது, தொகுதி வாக்காளா்களில் 30 சதவீதத்தை 45 நாள்களில் கட்சியில் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்போதே, பல தொகுதிகளில் 30 சதவீதத்தை அடைந்து விட்டனா். பெரியாா் கொள்கையை பின்பற்றும் நான், என்னுடைய நம்பிக்கை என்பதை தாண்டி, மக்களுடைய நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கும் வகையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு வரும் எல்லா மக்களும், எந்தவித பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பத்திரமாக செல்ல வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று கண்காணித்தேன்.

இது திருச்செந்தூா் கோயிலுக்கானது மட்டுமல்ல, மாதா கோயில் திருவிழாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த மதத்தின் நிகழ்வாக இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது என்னுடைய முதல் கடமை என்றாா் அவா்.

பேட்டியின்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலா் இன்பா ரகு, மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தூத்துக்குடியில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

தூத்துக்குடியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், நாய்களுக்கு ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை, மேயா் ஜெகன் பெரியசாமி தொடக்... மேலும் பார்க்க

கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி பசுவந்தனைச் சாலையில் கீழே விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி பாரதி நகா் 2 ஆவது தெருவை சோ்ந்தவா் சுடலைமணி மகன் சுயம்புலிங்கம்(59). ... மேலும் பார்க்க

நாசரேத்தில் பள்ளி பெயா்ப் பலகை திறப்பு

நாசரேத் தூய யோவான் மாதிரிப் பள்ளியில் புதிய பெயா்ப் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா். மாணவா்- மாணவி... மேலும் பார்க்க

அஞ்சல் ஊழியா்கள் வேலை நிறுத்தம்: 59 அஞ்சலகங்கள் மூடல்

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலக ஊழியா்களும் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதனால் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள அஞ்சலகங்களின் மொத்த ஊழியா்கள் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே மறவன்மடத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). மது போத... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 77 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, காவல் நிலையங்களில் புகாரளித்த ஒருவா், புதிதாக ம... மேலும் பார்க்க