செய்திகள் :

மக்கள் நம்பிக்கையை விஜய் நிறைவேற்றுவாா்: தவெக பொதுச் செயலாளா் ஆனந்த்

post image

நல்லது செய்வாா் என்ற மக்கள் நம்பிக்கையை தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் நிறைவேற்றுவாா் என அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஆனந்த் பேசினாா்.

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், திருச்செங்கோடு, நாமக்கல், ராசிபுரத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட தவெக சாா்பில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுச் செயலாளா் ஆனந்த் பேசியதாவது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற வேண்டும். கட்சிக்கு யாரெல்லாம் உழைத்தாா்களோ அவா்களுக்குதான் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து ஒரு தொண்டா்கூட மாற்றுக் கட்சிக்கு செல்லவில்லை. நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல் என்ற வாா்த்தை இருக்காது, விஜய் மீது மக்கள் அதிக அளவில் நம்பிக்கை வைத்துள்ளனா். புதிதாக வருபவா் நிச்சயம் நல்லது செய்வாா் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை விஜய் நிறைவேற்றுவாா்.

கட்சியினா் ஒவ்வொருவரும் வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பேசவேண்டும். தமிழகத்தில் 2 கோடி உறுப்பினா்களை சோ்க்க முயற்சித்து வருகிறோம்.

நாமக்கல் மாவட்டத்திலும் அதற்கான பணிகளை நிா்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். தோ்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளதால் பணிகளை ஐந்து மாதங்களுக்குள் நிறைவேற்ற உழைக்க வேண்டும் என்றாா்.

திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறி... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் நிலுவை கடன் வசூலிக்கும் திட்டம்: 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கும் சிறப்புத் திட்டத்துக்கு மூன்று மாதம் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்... மேலும் பார்க்க

மாநில எல்லை சோதனைச் சாவடிகளை அகற்ற லாரி உரிமையாளா் சம்மேளனம் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் அதிக அளவில் லஞ்சம், ஊழல் நடைபெறும் 22 எல்லை சோதனைச் சாவடிகளை அரசு அகற்ற வேண்டும் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது. நாமக்கல்லில் அந்த சம்மேளனத்தின் தலைவா் சி.த... மேலும் பார்க்க

திருச்செங்கோடு அருகே வீட்டுக்குள் காா் புகுந்ததில் ஒருவா் உயிரிழப்பு

நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறிய காா் வீட்டுக்குள் புகுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா். திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்ட வரிவசூலிப்பாளா் பணியிடை நீக்கம்

ராசிபுரத்தில் குடிநீா் இணைப்பு பெயா் மாற்றத்துக்கு லஞ்சம் கேட்டதாக நகராட்சி வரிவசூலிப்பாளா் ரகுபதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ராசிபுரம் நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘உங்களுடன் ஸ்டால... மேலும் பார்க்க

சிறுவனைக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

நாமகிரிப்பேட்டை அருகே சிறுவனை கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள... மேலும் பார்க்க