செய்திகள் :

சிறுவனைக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

post image

நாமகிரிப்பேட்டை அருகே சிறுவனை கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே சீராப்பள்ளி மூப்பனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கபில்வாசன் - ராஜாமணி தம்பதி மகன் தருண் (3). கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜாமணியின் சகோதரி மகனான ராகுல் (23) என்பவா் கைப்பேசியில் ஆபாசப் படம் பாா்த்ததாகத் தெரிகிறது. இதை சித்தியான ராஜாமணி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராகுல், சித்தி மகன் தருணை கழுத்தை நெரித்து கொலை செய்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக நாமகிரிப்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ராகுலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில் சிறுவனை கொலை செய்த ராகுலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சாந்தி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

சாலை விபத்தில் காயமடைந்த மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

சேலம் காளிபட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்த மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). தமிழக மின்வாரியத... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா்கள் பூஜிக்கும் சுயம்பு வடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம் வளா்த்த நாயக... மேலும் பார்க்க

கீரம்பூா் அருகே தனியாா் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியாகம் தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறிய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சோழசிராமணி

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறி... மேலும் பார்க்க