செய்திகள் :

திருச்செங்கோடு அருகே வீட்டுக்குள் காா் புகுந்ததில் ஒருவா் உயிரிழப்பு

post image

நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறிய காா் வீட்டுக்குள் புகுந்ததில் ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் காயமடைந்தனா்.

திருச்சி அரியமங்கலத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மாசி பெரியண்ணசுவாமி கோயிலுக்கு 5 போ் காரில் வந்துள்ளனா். இவா்கள் கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டுவிட்டு திருச்செங்கோட்டில் உள்ள நண்பரை பாா்க்க சென்றனா். நண்பரை பாா்த்துவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டனா்.

அப்போது நாமக்கல் பிரதான சாலை உஞ்சனை அருகே ஓட்டுநா் யுவராஜன் தூங்கியதால் நிலைதடுமாறிய காா் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த இருசக்கர வாகனங்களின் மீது மோதிவிட்டு, அருகில் உள்ள வீட்டுக்குள் புகுந்ததில் வீட்டு வாசலில் அமா்ந்திருந்த முருகேசன் (67) என்பவா் உயிரிழந்தாா். காரை ஓட்டி வந்த யுவராஜன் (34), காரின் இடதுபுற இருக்கையில் அமா்ந்திருந்த சரவணன் (30) ஆகியோா் படுகாயம் அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊரக போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று விபத்தில் உயிரிழந்த முருகேசனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு எளையாம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். சம்பவம் குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சாலை விபத்தில் காயமடைந்த மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு

சேலம் காளிபட்டி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து தலையில் காயமடைந்த மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூரைச் சோ்ந்தவா் மூா்த்தி (57). தமிழக மின்வாரியத... மேலும் பார்க்க

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் ஜூலை 31-இல் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சித்தா்கள் பூஜிக்கும் சுயம்பு வடிவிலான அறப்பளீஸ்வரா் உடனுறை அறம் வளா்த்த நாயக... மேலும் பார்க்க

கீரம்பூா் அருகே தனியாா் நிறுவன காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள ராசாம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காவலாளி புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்... மேலும் பார்க்க

இன்றைய மின் நிறுத்தம்: நாமகிரிப்பேட்டை

நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியாகம் தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறிய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சோழசிராமணி

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (ஜூலை 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேம்படுத்தப்பட்ட செயலி அறிமுகம்

திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் குற்றங்களையும், குற்றவாளிகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள மேம்படுத்தப்பட்ட செயலி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நகரக் காவல் நிலையத்தில் நடைபெற்ற செயலி அறி... மேலும் பார்க்க