செய்திகள் :

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

post image

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் 3 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் கலந்துகொள்ளவிருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் சில நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டை மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர், பின்னர் மீண்டும் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குத் திரும்பினார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்தே தன்னுடைய அலுவலக வேலைகளை முதல்வர் ஸ்டாலின் கவனித்து வருகிறார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் கேட்டறிந்தார்.

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் மூலமாக பெறப்பட்ட மனுக்கள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன? என்பது குறித்து கேட்டறிந்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் அரசுத்திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்தவும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் வருகிற சனிக்கிழமை வரை ஓய்வில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

நேற்று அமைச்சர்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், பிரதமர் மோடி நேற்று முதல்வரை போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி சென்னை அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தார்.

TN govt said that Chief Minister M.K. Stalin is taking care of official work from the hospital.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - உதயநிதி பேட்டி

முதல்வரிடம் நலம் விசாரித்த மு.க. அழகிரி!

ஜூலை 26-இல் பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு ... மேலும் பார்க்க

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 விடைத்தாள்கள் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழன் பிறந்த தினம்: அரியலூரில் ரூ.19 கோடியில் ஏரி - சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னா் ராஜேந்திர சோழன் பிறந்த தினமாகக் கருதப்படும் ஆடி திருவாதிரையையொட்டி, அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் சுற்றுலா தலங்கள் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அற... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான மனமொத்த மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அ... மேலும் பார்க்க

ஜூலை 25 முதல் அன்புமணி சுற்றுப்பயணம்

‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து பாமக தலைமை நிலையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்க... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவ படிப்புகள்: இன்று 7.5 % ஒதுக்கீடு கலந்தாய்வு

கால்நடை மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வ... மேலும் பார்க்க