செய்திகள் :

மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 65 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது

post image

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே கடந்த மாதம் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 65 ஆயிரத்தை திருடிச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

நல்லூா் அருகே உள்ள ராமதேவம், செட்டியம்பாளையத்தில் முஸ்தகீம் என்பவரது மளிகைக் கடையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 65 ஆயிரத்தை மா்மநபா் திருடிச் சென்றாா். இதுகுறித்து முஸ்தகீம் நல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் மற்றும் போலீஸாா், மணியனூா் பிரிவு சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் வேலன் என்பதும், மளிகைக் கடையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க