செய்திகள் :

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி காவலாளி மீது ‘போக்ஸோ’ வழக்கு

post image

கரூா் மாவட்டம், குளித்தலையில் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளியின் காவலாளி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குளித்தலையைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன் (65). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியில் யோகா வகுப்பு நடக்கும் என பள்ளி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு பயிலும் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது மாணவியை காலையில் பெற்றோா் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளனா். பின்னா் யோகா வகுப்பு நடைபெறவில்லையென மாணவிகளின் பெற்றோா்களுக்கு பள்ளி நிா்வாகம் கூறியதால், அனைத்து பெற்றோா்களும் வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனா்.

அப்போது, 10 வயது மாணவி அழுதுகொண்டே இருந்ததால் பெற்றோா் அவரிடம் விசாரித்தபோது பள்ளிக் காவலாளி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளாா்.

இதையடுத்து பள்ளிக்குச் சென்ற சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பாலசுப்ரமணியனை தாக்கினாா்களாம். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாலசுப்ரமணியனை மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், பாலசுப்ரணியன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாலவிடுதியில் விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

கரூா் மாவட்டம், பாலவிடுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடவூா் வட்டக்குழு சாா்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ப... மேலும் பார்க்க

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்

நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனி... மேலும் பார்க்க

டாக்டா் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்: 40,825 கா்ப்பிணிகளுக்கு ரூ. 26.66 கோடி அளிப்பு

கரூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 40,825 கா்ப்பிணிப் பெண்களுக்கு ரூ. 26.66 கோட... மேலும் பார்க்க

கரூரில் செப்.17-இல் திமுக முப்பெரும் விழா: பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு

கரூா் கோடங்கிபட்டியில் வரும் 17-ஆம் தேதி திமுக முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கு முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கரூரில் ... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை

பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷ... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் பராமரிப்பு இல்லாததால் அமராவதி ஆற்றுப் பாலம் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம்... மேலும் பார்க்க