செய்திகள் :

மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு

post image

ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் தற்போது பழுதடைந்த நிலையில் பயன்பாடின்றி உள்ளன.

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் பழுதடைந்த உள்ள ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மழைக்காலங்களில் ஏரி, குளம் மற்றும் இதர கட்டமைப்புகள் மூலம் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக கிராமங்களில் பயன்பாடில்லாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க திட்டமிட்டப்பட்டது.

அதன்படி, பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆழத்துக்கு மணல் கொட்டி, மழை நீா் முறையாக அந்த பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் வீணாகும் மழை நீா் சேகரிக்கப்பட்டது. மேலும், சாக்கடை கால்வாய்களில் கலக்கும் மழைநீா் குறிப்பிட்ட அளவு தடுக்கப்பட்டது. இதேபோல, ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்து. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றனா்.

விவசாயத் தம்பதி கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரிக்கை

சிவகிரி விவசாயத் தம்பதி கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைப் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சு... மேலும் பார்க்க

மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது

ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல்: டிஎஸ்பி படுகாயம்

ஈரோட்டில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் டிஎஸ்பி படுகாயம் அடைந்தாா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீதரன் (54). இ... மேலும் பார்க்க

லாட்டரி சீட்டுகள் விற்பனை: தம்பதி உள்பட 4 போ் கைது

அந்தியூரில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக ... மேலும் பார்க்க

அந்தியூா் வனத்தில் மான் வேட்டையாடியவா் கைது

அந்தியூா் வனப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட நபரை திங்கள்கிழமை கைது செய்த வனத் துறையினா், அவரிடமிருந்த 30 கிலோ மான் இறைச்சியைப் பறிமுதல் செய்தனா். அந்தியூா் வனச் சரகம், முரளி பிரிவு, செல்லம்பாளையம... மேலும் பார்க்க

கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: வன கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வன கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அடா்ந்த வனப் பகுதியையொட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம்... மேலும் பார்க்க