வனத்துறை அதிகாரி வீட்டில் சோதனை: 1.5 கிலோ தங்கம், ரூ.1.44 கோடி பறிமுதல்
மாநில ஆணழகன் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு
மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வென்ற அறந்தாங்கி கல்லூரி மாணவருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரியலூரில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதுநிலை கணினி அறிவியல் துறையின் 2-ஆம் ஆண்டு மாணவா் மா. சுஜீகரன் பங்கேற்று முதல் இடத்தைப் பெற்றாா்.
55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 38 பேரில் முதலிடத்தைப் பெற்று கோப்பை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழைப்பெற்றாா்
இதைத் தொடா்ந்து, கல்லூரியின் முதல்வா் ம. துரை, துறைத் தலைவா்கள் து. சண்முகசுந்தரம், மு. அன்பழகன், ப. நாராயணசாமி உள்ளிட்டோரும் புதன்கிழமை மாணவா் சுஜீகரனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனா்.