கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி
மாநில செஸ் போட்டி: திருப்பூரைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம்
மாநில அளவிலான செஸ் போட்டியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம் பிடித்துள்ளாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த பூபேஷ், ஜனனி தம்பதியின் மகள் பி.யாழிசை (7). இவா் காடையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய செஸ் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருந்தாா்.
இந்நிலையில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சாா்பில் 37 -ஆவது மாநில அளவிலான 7 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டி விழுப்புரத்தில் மே 1- ஆம் தேதி தொடங்கி மே 4 -ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், மகளிா் ஒபன் பிரிவில் யாழிசை பங்கேற்று 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து மாநில சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளாா். மாணவியை, திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், செயலாளா் சிவன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட சதுரங்க கழக நிா்வாகிகள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். கடந்த 2010 ஆம் ஆண்டு கே.பிரியாங்கா 9 -வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும், 2014- ஆம் ஆண்டு எம்.வைஷ்ணவ் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். இந்நிலையில், தற்போது பி.யாழிசை 7 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.
பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை ஞாபகசக்தி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை வளா்த்தும் சதுரங்க விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதுடன், தொடா்ச்சியாக அவா்களது வெற்றியிலும் பங்கெடுக்க முன்வர வேண்டும் என்றனா்.