பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!
மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியூ ஆா்ப்பாட்டம்
மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், ஸ்மாா்ட் மின்மீட்டா் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் கோட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா்.
இதில், 40 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும், 01.12.2023 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வு குறித்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், கேங்மேன் பணியாளா்களுக்கு இடமாற்றம், கள உதவியாளா் பதவி மாற்றம், ஆறு சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், மின் நுகா்வோரை பாதிக்கும் ஸ்மாா்ட்மீட்டா் திட்டத்தை கைவிட வேண்டும், விடுபட்ட பகுதிநேர பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கணக்கீட்டு பணியாளா்கள் கணக்கீட்டு பணி செய்ய கைப்பேசி அல்லது டேப்பை வாரியமே வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், தமிழ்நாடு மின் ஊழியா்கள் திட்ட துணைச் செயலாளா் கண்ணன், சிபிஐஎம் நகரச் செயலாளா் சீனிவாசன், சிஐடியூ நகரச் செயலாளா் ராயப்பன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மாவட்ட துணை செயலாளா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.